hourglass loader serial light serial light

சத்திரப்பட்டி



சத்திரப்பட்டி(Chatrapatti)
Location Type: Village
Offcial Name: R.Chatrapatti
Coordinates: 9.415278⁰N 77.595041⁰E
Government Type: Panchayath
Elevation: 175m (574ft)
Time zone: IST (UTC+05:30)
Area code(s) Vehicle registration: TN - 67, TN - 84
STD Code: 04563
சத்திரப்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தாலுகாவில் உள்ளது. விருதுநகருக்கு தெற்கே 62 கி.மீ தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 581 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம்: ராஜபாளையம் (8 கி.மீ); அருகில் உள்ள விமான நிலையம்; மதுரை (85 கி.மீ.) திருவனந்தபுரம் (176 கி.மீ). ராஜபாளையத்திலிருந்நு 8 கி.மீ கிழக்கு திசையிலும் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 14 கி.மீ தெற்கு திசையிலும் உள்ளது.


வரலாறு

ராணி மங்கம்மால் (ஆட்சி 1689-1704) மதுரை நாயகர் வம்சத்தை சேர்ந்த இவர் மதுரையை 11 வது ஆட்சியாளராக ஆட்சி செய்தார். மதுரை தலைநகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறிய மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு சாலைகள், நடைப்பாதைகள், பயணிகள் ஓய்வு இல்லங்கள், நீர்ப்பாசனம் மற்றும் தோட்டங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அவர் ஒரு புகழ்பெற்ற ராணியாக இருந்தார். ராணி மங்கம்மால் ஒரு திறமையான மற்றும் பிரபலமான ஆட்சியாளராக இருந்தார், மேலும் அவரது நினைவு மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இன்றும் போற்றப்படுகிறது. மங்கம்மால் சிவில் நிர்வாகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, பாசனம் மற்றும் தகவல்தொடர்புகளில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றினார். பல நீர்ப்பாசன தடங்கள் பழுதுபார்க்கப்பட்டன, புதிய சாலைகள் அமைக்கப்பட்டன, அவென்யூ மரங்கள் நடப்பட்டன. கன்னியாகுமரியிலிருந்து நெடுஞ்சாலை முதலில் ராணி மங்கம்மலின் காலத்தில் கட்டப்பட்டது, அது 'மங்கம்மால் சாலை' என்று அழைக்கப்பட்டது. அவர் பல பொதுப்பணிகளை கட்டினார், குறிப்பாக யாத்ரீகர்களுக்காக சவுல்ட்ரிஸ் (பயணிகள் ஓய்வு இல்லம்). இப்போது சத்திரப்பட்டி கிராமம் வழியாக செல்லும் மங்கம்மால் சாலை "வன்னியம்பட்டி" சாலை என்று அழைக்கப்படுகிறது. அந்த 14 கி.மீ நீளமுள்ள சாலை சத்திரப்பட்டி கிராமத்தை வடக்கே ஸ்ரீவில்லிபுத்தூரையும் தெற்கில் முதுகுடி / சோழபுரத்தையும் இணைக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சங்கரன் கோவில் / கரிவலமவந்தநல்லூரை அடைய இது குறுகிய பாதை. சாலையில் ஒரு சவுல்ட்ரி (பயணிகள் ஓய்வு இடம்- தமிழ் மொழியில் இது சத்திரம் என்று அழைக்கப்படுகிறது) இருந்தது. இந்த தமிழ் வார்த்தையான "சத்திரம்" (பயணிகள் ஓய்வு இடம்) மற்றும் "பட்டி" (ஒரு கிராமத்திற்கான பின்னொட்டு) ஆகியவற்றிலிருந்து இந்த கிராமத்திற்கு சத்திரப்பட்டி என்னும் பெயர் கிடைத்தது.

காலநிலை

இந்த கிராமம் தீவிர வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பத பகுதியாகும். வடகிழக்கு பருவமழை இப்பகுதிக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவை வழங்குகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை குற்றாலம் சீசன் மழையை வழங்குகிறது. மேலும் இப்பகுதி மற்றதைவிட ஒப்பிடுகையில் குளிர்ச்சியாக இருக்கிறது.

இடங்கள்
  1. நடுத்தெரு
  2. வடக்குத்தெரு
  3. தெற்குத்தெரு
  4. உயர்நிலைப்பள்ளித் தெரு
  5. ஞானியார்க் கோவில்த்தெரு
  6. புதுத்தெரு
  7. வயக்காட்டுத் தெரு

கிராமத்தின் நடுவே ஒரு பெரிய பஜார் உள்ளது. இங்கு மாலை வேளைகளில் சுற்று வட்டார மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். இந்த இடம் ராஜபாளையத்தின் கிழக்கே மிகப்பெரிய சந்தையாக உள்ளது எனலாம். இரண்டு நீர் சேமிப்பு அணைக்கட்டுகள் உள்ளன 'வாகைகுளம்' மற்றும் 'கானகுளம்'.

கல்வி

கிராமிய மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். கிராமத்தில் இரண்டு அரசு பள்ளிகளும் இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் முதன்மை பள்ளிகளாக உள்ளன. விநாயகர் தொடக்க பள்ளி (பிளாட்டினம் ஜூபிலி கொண்டாடப்பட்டது) அரசு உயர்நிலைப்பள்ளி (ஒரு நூற்றாண்டுப் பள்ளி, சுற்று வட்டார மாணவ மாணவிகள் பயிலும் பள்ளி) அரசாங்கத்தின் உயர்நிலைப்பள்ளி இரண்டு உள்ளன. ஒன்று மாணவர்களுக்காகவும், மற்றொன்று மாணவிகளுக்காகவும் உள்ளன. பெரும்பாலும் மக்கள் ஆங்கிலவழி கல்விக்கு ராஜபாளையம் செல்லுகின்றனர். ஆண்களின் சம்பளம் பொருளாதார காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் கல்வி முக்கியத்துவம் பெற்றது.

வேலை & வாழ்க்கை

அறுவைச் சிகிச்சை பருத்தி தொழில்களில் இந்த கிராம மக்கள் ஈடுப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஊதிய உடன்பாட்டைக் கடைப்பிடிக்காததற்காக கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது யூனியன்கள். உரிமையாளர்களிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. பெரும்பாலும் தொழில் உரிமையாளர்களுக்கு எதிரான தெரு ஆர்ப்பாட்டங்கள் இருக்கும். பருத்தி துணிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முளைக்கொட்டு & தைப்பூசம்

மரபார்ந்த இந்து மதம் பின்பற்றப்படுகிறது. தை பொங்கல், பூசம் மற்றும் மாரி அம்மன் (ஒரு உள்ளூர் கோயில்) திருவிழா கொண்டாடப்படுகிறது. மாரி அம்மன் திருவிழா ஒரு பெரிய விழாவாகும் மாரிக்காக மாரியம்மன் திருவிழா கொண்டப்படுகிறது. மிகவும் பழைய நாட்களில் மக்கள் குடியேற ஆரம்பித்தபோது இந்த பகுதியில் விவசாயம் அவர்களின் முக்கிய ஆக்கிரமிப்பாக இருந்தது. இந்த கிராமத்தின் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். அவர்கள் சந்தர்பங்களில் சொந்தகிராமத்திற்கு வருவர். கிட்டத்தட்ட 30000 முதல் 40000 பேர் வரை கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு இரண்டாவது வாரம் மாரி திருவிழா கொண்டாடப்படுகிறது. முளைக்கொட்டு சத்திரப்பட்டியின் பிரபலமான திருவிழா ஆகும். திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்பு வீடுகளில் உள்ள பெண்கள் ஒன்பது வகையான பானைகளில் ஒரு பானையில் ஒரு முழு இருண்ட அறையில் முளைப்பாரி வளர்க்கிறார்கள். திருவிழாவின் இரண்டாவது நாளில், அவர்கள் பானையை தலையில் எடுத்து கிராமத்தில் இருந்து தொலைவில் உள்ள ஒரு கிணற்றில் வைப்பர். ஒரு குடும்பத்தை ஒன்றுசேர்க்கும் திருவிழாவாக இந்த திருவிழாவை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த விழாவிற்கு பொதுவாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். இரண்டாவது முக்கிய திருவிழாவாக தை பூசமும் வைகாசி விசாகமும் நன்றாகக் கொண்டாடப்படுகிறது


முளைக்கொட்டு திருவிழா - 2024

அருள்மிகு
ஸ்ரீ செல்வமுளைமாரியம்மன்
முளைக்கொட்டு திருவிழா
வரலாறு

சத்திரப்பட்டி ஊரின் பெயர்க்காரணம்: Jayamariyamman Chatrapatti

எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவனும் சக்தியும், நமது பாரத மணித்திரு நாட்டில் தென்நாட்டை தமக்கு உடைமையாகக் கொண்டு, நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும், கோவில் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் அருள்பாலித்து வருகின்றார்கள். அந்த இறைசக்தியின் அருள் பொலிந்து விளங்கும் ஊர்களில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் பொக்கிசப்பெட்டியாகத் திகழும் சத்திரப்பட்டி ஆன்மீகமும், தெய்வீகமும் நிறைந்த தொழில் நகரமாகும்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் சத்திரப்பட்டியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் மங்கம்மாள் சாலையில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பார சத்திரம் அமைந்திருந்த காரணத்தால் சத்திரப்பட்டி என்று அழைக்கப்படுவதாக அறிந்தோர் கூறுவர். வேதத்தில் கூறப்பட்ட பலவகை யாகங்களில் உயர்ந்த்தாகக் கருதப்படும் சத்திரயாகம் செய்யப்பட்டதாலும் சத்திரப்பட்டி என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாணிக்கவாசகப்புலவர் அவதாரம்:

அன்னையின் அருளால் சுமார் 280 ஆண்டுகளுக்கு முன் சத்திரப்பட்டி வடக்குத்தெருவில் வாழ்ந்து வந்த கற்பக மூப்பனார் மற்றும் அவரது துணைவியாருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போல திகழ வேண்டும் என்று கருதிய பெற்றோர்கள், அக்குழந்தைக்கு மாணிக்கவாசகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். கற்பக மூப்பனார் உடன் பிறந்தோர் ஆறுமுகம் மூப்பனார் மற்றும் சுகிர்த மூப்பனார். மாணிக்க வாசகருக்குப் பின் மருத்துவாமலை மற்றும் மாடசாமி என்ற இரு பிள்ளைகள் பிறந்தன.

மாணிக்கவாசகர் பள்ளி செல்லவில்லை. எழுதப்படிக்கத் தெரியாது. நாள்தோறும் ஊர்க்காவல் தெய்வமாக விளங்கும் அம்மச்சியாரம்மன் மற்றும் துரைமடம் சென்று வழிபாடு செய்து வருவது வழக்கமாக இருந்தது.

மாணிக்கவாசகருக்கு கவிபாடும் ஆற்றல் வந்த வரலாறு:

மாணிக்கவாசகருக்கு சுமார் 15 வயது இருக்கும்போது ஒருநாள் கடுமையான காய்ச்சல். காய்ச்சலையும் பொருட்படுத்தாது துரைமடம் சென்று வழிபாடு செய்யச் சென்றார். அங்கு தளவாய்த்துரை என்ற ஒரு மகான் அடக்கமாகி இருந்தார். வழிபாடு செய்து கண் அயர்ந்த மாணிக்கவாசகர் கனவில், அந்த மகான் தோன்றி அவரது நாக்கில் ஓம் என்ற அச்சரத்தை எழுத அதனால் பாடல் பாடும் ஆற்றலும், தெய்வீக ஞானமும் தோன்றியது

செல்வ முளைமாரியம்மன் திருவுருவச்சிலை தோன்றிய வரலாறு: Selvamulaimariyamman Chatrapatti

மாணிக்கவாசகப் புலவருக்கு முளைக்கொட்டுத் திருவிழாவின் போது, அன்னையின் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்ய வேண்டு மென்றும், அன்னையின் திருவுருவம் செய்து அதனை சப்பரத்தில் எழுந்தருளசெய்து திருவீதி உலா வந்து வழிபாடு செய்ய வேண்டுமென்று ஆவல் கொண்டார். தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு மனமுவந்து அம்மச்சியாரம்மனிடம் முறையிட்டார்.

அம்மாச்சியாரம்மன் அவர் கனவில் தோன்றி சப்பரத்தில் வைத்து வழிபட வேண்டிய திருவுருவம் செய்யும் ஆற்றலையும், திருவுருவம் செய்ய வேண்டியவடிவத்தையும் காட்டியருளினாள். கனவில் கண்ட உருவத்தை பார்த்த புலவர் அன்னையிடம் பின்வருமாறு வினவுகிறார்.

"கொப்பும் காதிலே இரத்தினக் குழைஅணிந்து
கோலாகலமாக வந்தது யாரடி"


அன்னையர் பின்வருமாறு விடை பகர்கின்றார்.

"செப்பு முலையாள் பராசக்தி அம்பிகைநான்
செல்வி வடபத்ரகாளி நானடா"


என்று பதிலளித்தார். கனவிலிருந்து விழித்த புலவர், தனது வீட்டு பின்புறம் உள்ள முருங்கை மரத்தில் அன்னையின் உருவத்தை தானே வடிவமைத்தார்.

அவர் அன்று வடிவமைத்துத் தந்த உருவம்தான் செல்வ முளைமாரி என்னும் திருப்பெயரால் வடக்குத்தெருவில் உள்ள செல்வ முளைமாரி திருக்கோவிலில் குடிகொண்டு வருடந்தோறும் திருஊஞ்சலில் சயனித்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். முளைக்கொட்டுத் திருவிழாவின் போது மட்டும் நின்ற கோலத்தில் சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களின் வேதனையைத் தீர்த்து, வேண்டிய வரம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள்.

கும்மிப் பாடல்:

முளைக்கொட்டு திருவிழாவின் போது அன்னை சப்பரத்தில் பவனி வரும்போது அவள் பெருமைகளைப் பாடி ஆடுவதற்காக கும்மிப்பாடல்களுக்குத் தக்கபடி கும்மியடிக்கும் முறைகளையும் இளைஞர்களுக்கு கற்று கொடுத்து முளைக்கொட்டு திருவிழாவில் கும்மியடிக்கும் பாடல் ஆடல் கலையை உருவாக்கினார்.

கோலாட்டப் பாடல்:

பள்ளி மாணவர்களுக்காக கோலாட்ட பாடல்களை இயற்றினார். சூரியன் கன்னிராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி நோன்பு தொடக்க காலத்தில் வருகின்ற நோன்பு எனும் திருவிழாவில் பள்ளி மாணவர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடி கோலாட்டம் அடித்துக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

மகாசமாதி அடைந்த வரலாறு:

சுமார் 90 வயதில் மாணிக்க வாசகப் புலவர் ஒரு திங்கட்கிழமை அன்று ஜீவ சமாதியானார். ஜீவசமாதி அடைந்த இந்த மகானின் பூத உடலை வடக்குத் தெரு சாலிமகரிசி கோத்திரத்திற்கு பாத்தியப்பட்ட பொது இடத்தில் அடக்கம் செய்து சமாதி எழுப்பி இறைவழிபாடு செய்து வருகின்றனர். இந்த முளைக்கொட்டுத் திருவிழா பின்னர் சத்திரப்பட்டியின் அனைத்துத் தெருகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

முளைக்கொட்டுத் திருவிழா: Sadaimulaimariyamman Chatrapatti

தொழில் நகராம் சத்திரப்பட்டியில் வாழும் சாலியர் சமுதாய மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழா முளைக்கொட்டு திருவிழா. இது பழங்காலந்தொட்டே நமது மக்களால் வடக்கு தெருவில் உள்ள செல்வ முளைமாரியம்மனுக்கு கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா சத்திரப்பட்டி சமுசிகாபுரம் ஊர்மக்கள் கொண்டாடும் மிக முக்கிய திருவிழா ஆகும். 300 வருடங்களாக சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் தெட்சாயண காலத்திலான ஆடி மாத பௌர்ணமியில் நடத்தப்படுகிறது.

அம்மன் வரலாறு:

செல்வ முளை மாரியம்மன் சுயம்பாக முருங்கை மரத்திலிருந்து வந்தவள். முளைகொட்டு நாட்களைதவிர மற்ற தினங்களில் ஊஞ்சலில் படுத்தவாறு சயனகோலத்தில் காட்சி தருகிறாள். இப்பகுதியில் இந்த அம்மன் மட்டும்தான் தங்க பாவாடையில் தரிசனம் தருகிறாள்.

தேங்காய் உடைப்பு:

ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஊர் பெரியவர்கள் கொட்டு மேலத்துடனும், வானவேடிக்கையுடனும் தெரு சுற்றி அம்மச்சியார் அம்மன் திருக்கோவிலில் தேங்காய் உடைத்து முளைக்கொட்டுத் திருவிழாவை உறுதி செய்கிறார்கள்.

திருவிழா ஆரம்பம்:

முளைக்கொட்டு திருவிழா 10 தினங்களுக்கு முன் ஆடி வளர்பிறையில் கொடியேற்றத்துடன் இனிதே துவங்குகிறது. வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு தெருவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளால் ஓவ்வொரு வீடுகளிலும் நன்கொடையாக காசு வசூலிக்கப்பட்டு அந்தந்த தெருவில் இருந்து பயறு வாங்கி ஊற வைக்கப்படுகிறது. இது முளை தாண்டுதல் என்று பெயர். முளை தாண்டிய பின் ஒவ்வொரு தெருவிலும் பெண்களால் தினமும் வட்டக்கும்மி அடிக்கப்படுகிறது. சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் பெண்கள் பயபக்தியுடன் ஒவ்வொரு வீடுகளிலும் விரதமிருந்து முளைப்பாரியை வளர்கிறார்கள். முளைக்கொட்டுத் திருவிழாவின் செவ்வாய்க்கிழமையன்று முளைப்பாரி வளர்த்த வீடுகளிலிருந்து அவரவர் தங்கள் வீட்டிற்கு கொட்டு மேளத்தோடு இரவே கொண்டு சென்று கத்தரிக்காய், கருவாடு, முட்டை, புண்ணாக்கு கீரை, கொழுக்கட்டை, மாவிளக்கு படைத்து தேங்காய் உடைத்து அம்மனை வீடுகளில் வழிபடுகிறார்கள்.

அம்மன் சப்பரத்தில் எழுந்தருளல்:

செவ்வாய்கிழமை இரவு முதல் 3 நாட்களும் இரவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி அம்மன் வீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

முளைப்பாரி வீதி உலா: Yogamariyamman Chatrapatti

புதன்கிழமை காலை 9:00 மணி அளவில் முளைபாரி அம்மன் வீடுகளில் இருந்து கொட்டு மேளத்துடன் வீதி உலா வந்து அந்தந்த தெருவிற்குப் பாத்தியப்பட்ட பந்தலுக்கு ஊர் சுற்றி கொண்டு வரப்படுகிறது. சப்பரத்தில் அருள்பாலிக்கும் அம்மனை இறக்கி பந்தலில் வைத்து அதை சுற்றி முளைப்பாரி வைக்கப்படுகிறது. பின்பு முளைப்பாரி அம்மனுக்கு தெருவில் உள்ள மக்கள் பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்து, மொட்டை அடித்து, தேங்காய் உடைத்து நேர்த்திகடனை செலுத்துகிறார்கள். அன்று மாலை புத்தாடை அணிந்து முளைப்பாரியை கொட்டு மேளத்துடன் துரைமடம் அருகில் உள்ள கிணற்றில் முளைப்பாரி செலுத்தப்படுகிறது. புதன்கிழமை இரவு அனைத்து தெரு முளைமாரியம்மன் தெய்வங்கள் சப்பரத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

வியாழக்கிழமை இரவு 12:00 மணியளவில் சப்பரத்தில் அம்மனை எவுந்தருல் செய்து வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு சப்பரத்தில் இருந்து இறக்கி மஞ்சள் நீராட்டுவிழா நடத்தப்படுகிறது. அன்று அம்மனை ஊஞ்சலில் வைத்து அவரவர் தெருவில் உள்ள பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி திருவிழா சீரோடும் சிறப்போடும் வெகு விமர்சையாகநடத்தி முடிக்கப்படுகிறது.


ShareContact UsLanguage:
Feedback

Name*

Email*

Message*